விசுவாவசுவே வருக
புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே
முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு
பத்திரிகை தரும மெனும் அருஞ்
சொல் லிங்கே
புத்துயிர் பெற்றே மீண்டும் துளிர்க்க
நித்தமும் அறமது தழைத்து நிலைக்க
மொத்தமாய்க் கொட்டாது வாழவே மழை வர
கொத்துக் கொத்தாக நெற்கதிர் விளைய
அத்தனை பஞ்சமும் இல்லாது போக
குத்திக் கிழிக்கும் குற்றங்க ளின்றி
தித்திக்கும் நல்ல செய்திகள் தருவாய்
பித்தாய் அலையும் பயங்கரவாதம்
மொத்துண் டழிந்து காணாமல் போக
நித்தமொரு சொல்லால் மக்களைக் குத்தும்
தத்துவம் அறியாப் புல்லர்க ளொழிய
சத்தான ஆள்வோர் பாரது தன்னில்
முத்தாக முடிவெடுத் தின்பமது பெருக
அத்திப்பூப் போலொரு அரசன் உள்ளான்
பத்தாண்டு மேலுமவன் ஆட்சியது தொடர
எத்திக்கும் எங்கள் பாரதம் ஒளிர
இத்தனை வேண்டுதல் உன்முன் வைத்தேன்
புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே
முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home