Saturday, December 27, 2025

விசுவாவசுவே வருக

 புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே

முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு

பத்திரிகை தரும மெனும் அருஞ் 

சொல் லிங்கே

புத்துயிர் பெற்றே மீண்டும் துளிர்க்க

நித்தமும் அறமது தழைத்து நிலைக்க

மொத்தமாய்க் கொட்டாது வாழவே மழை வர

கொத்துக் கொத்தாக நெற்கதிர் விளைய

அத்தனை பஞ்சமும் இல்லாது போக

குத்திக் கிழிக்கும் குற்றங்க ளின்றி

தித்திக்கும் நல்ல செய்திகள் தருவாய்

பித்தாய் அலையும் பயங்கரவாதம்

மொத்துண் டழிந்து காணாமல் போக

நித்தமொரு சொல்லால் மக்களைக் குத்தும்

தத்துவம் அறியாப் புல்லர்க ளொழிய

சத்தான ஆள்வோர் பாரது தன்னில்

முத்தாக முடிவெடுத் தின்பமது பெருக

அத்திப்பூப் போலொரு அரசன் உள்ளான்

பத்தாண்டு மேலுமவன் ஆட்சியது தொடர

எத்திக்கும் எங்கள் பாரதம் ஒளிர

இத்தனை வேண்டுதல் உன்முன் வைத்தேன்

புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே

முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home