This one's for her 60th birthday
கேரளமே இவள் தேசம்; மலப்புரமே இவளூராம்
ஓரளவே மலையாளம்; கொஞ்சு தமிழ் இவள் மொழியாம்
பேரன்பே இவளியல்பு; தாய்மைக்கோர் இலக்கணமாம்
சேரத்தின் கோவிலகம் மரபில் ஓர் திருமகளாம்
பேரிலுள்ள சீலமது வாழ்வினிலே நடைமுறையாம்
கார்மேகம் காதலிலே; கனிந்தென்னை நோக்கினளே
ஓருயிராய்க் கலந்ததனால் இல்வாழ்வு காவியமாம்
ஈரைந்து ஆறாக ஆண்டுகள்தாம் நிறைந்தனவே பேரொளியாய் வந்தவளே பேரின்பம் தந்தவளே
நாரணன்தன் அருளாலே நூறாண்டு வாழ்ந்திடுக
தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி
ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி
காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்
பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே
கோணாத கோலும் பிழைக்கின்ற போது
நாணாது மறத்தை அழிப்பது மதுவே
ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்
ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்
மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென
யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்
காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை
மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home