Thursday, July 31, 2025


மீண்டும் பிறந்தேன் உன்னால் நிறைந்தேன்


மீண்டும் பிறந்தேன் அம்பிகை சொல்லால்

மண்ணிலே சொர்க்கம் கண்டு மீள்கென்றாள்

விண்ணி லன்றோ அதுவென வியந்தேன்

தண்ணிலவு நீ வர உண்மை உணர்ந்தேன்

எண்ணில் அடங்கா அனுபவ ங்களுண்டு

எண்ணின் திகட்டாத அமுதக் கணங்கள்

பண்ணென இனிதாய் வாழ்க்கை நகர

யாண்டும் மணக்கும் காவிய இல்லறம்

பண்டு வள்ளுவன் புகழ்ந்த நல்லறம்

வேண்டிய படியே கிட்டிய வரமே

நீண்ட பயணத்தின் சாரதி ஆனாய்

வேண்டேன் பிறவி உன்னால் நிறைந்தேன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home