மீண்டும் பிறந்தேன் உன்னால் நிறைந்தேன்
மீண்டும் பிறந்தேன் அம்பிகை சொல்லால்
மண்ணிலே சொர்க்கம் கண்டு மீள்கென்றாள்
விண்ணி லன்றோ அதுவென வியந்தேன்
தண்ணிலவு நீ வர உண்மை உணர்ந்தேன்
எண்ணில் அடங்கா அனுபவ ங்களுண்டு
எண்ணின் திகட்டாத அமுதக் கணங்கள்
பண்ணென இனிதாய் வாழ்க்கை நகர
யாண்டும் மணக்கும் காவிய இல்லறம்
பண்டு வள்ளுவன் புகழ்ந்த நல்லறம்
வேண்டிய படியே கிட்டிய வரமே
நீண்ட பயணத்தின் சாரதி ஆனாய்
வேண்டேன் பிறவி உன்னால் நிறைந்தேன்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home