Thursday, July 31, 2025

கண்டதைச் சொன்னேன்  கடிந்தனர் மாக்கள்

உண்மையை ஆரே உவப்புடன் ஏற்பர்

கோமாளி எனவே கடந்து செல் கின்றார்

எமக் கொரு லாபமோ நட்டமோ இல்லை

இன்பமும் துன்பமும் அவரவர் விதியாம்

என் கடமை இங்கே மௌனமாய்க் காணல்

காண்கின்ற யாவும் விண்டுரைப் பதிங்கே

கண்ணன் ஒவ்வாச் செயலெனத் தெளிந்தேன்

நலமாய் வாழ்ந்து நீங்கிடும் வரையில்

உலகுண்ட வாயா! உள் நின் றொளிர்க!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home