கண்டதைச் சொன்னேன் கடிந்தனர் மாக்கள்
உண்மையை ஆரே உவப்புடன் ஏற்பர்
கோமாளி எனவே கடந்து செல் கின்றார்
எமக் கொரு லாபமோ நட்டமோ இல்லை
இன்பமும் துன்பமும் அவரவர் விதியாம்
என் கடமை இங்கே மௌனமாய்க் காணல்
காண்கின்ற யாவும் விண்டுரைப் பதிங்கே
கண்ணன் ஒவ்வாச் செயலெனத் தெளிந்தேன்
நலமாய் வாழ்ந்து நீங்கிடும் வரையில்
உலகுண்ட வாயா! உள் நின் றொளிர்க!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home