குரோதி ஆண்டே வருக வருக
குறைவின்றி இங்கே இன்பமே தருக
ஏர் பிடித்தோர் வாழ்வு வளமே பெறுக
பாரினில் அமைதி பாங்காய் நிலவுக
அரி போன்ற அரசன் எமை ஆள்கையிலே
நரிகள் கூட்டம் அஞ்சியே ஒளிக
தென்னாட்டில் தாமரை வெல்க மலர்க
பொன்னாட்டில் இல்லையென்ப தில்லாது ஒழிய
போர் எனும் சொல்லே பொருந்தாது போக
சீர் மிகு வாழ்வை அவனியோர் பெறுக
கார்வண்ணணன் இங்கே நிலை பெற்றருள்க
பாரதம் புவனம் தன்னிலே ஒளிர்க
குரோதி ஆண்டே வருக வருக
குறைவின்றி இங்கே இன்பமே தருக
கேரளமே இவள் தேசம்; மலப்புரமே இவளூராம்
ஓரளவே மலையாளம்; கொஞ்சு தமிழ் இவள் மொழியாம்
பேரளவில் நாயர் மகள்; வைணவர்தம் குலமகளாம்
சேரத்தின் கோவிலகம் மரபில் ஓர் திருமகளாம்
பேரிலுள்ள சீலமது வாழ்வினிலே நடைமுறையாம்
கார்மேகம் அன்பினிலே; கனிந்தென்னை நோக்கினளே
ஓருயிராய்க் கலந்ததனால் இல்வாழ்வு காவியமாம்
ஈரைந்து ஆறாக ஆண்டுகள்தாம் நிறைந்தனவே பேரொளியாய் வந்தவளே பேரின்பம் தந்தவளே
நாரணன்தன் அருளாலே நூறாண்டு வாழ்ந்திடுக


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home