Monday, July 27, 2020

தருவதாய் பெறுவதாய் வியாபாரமாகவே வாழ்க்கை என்றான உலகில்
 கருவினில் தொடங்கி இதுவரை அன்பினை வேள்வியாய்ச் செய்யும் தவமே
வெறுப்பவர் இருப்பினும் கொண்டதோர் அருளினைக் குறையாமல் நல்கும் கொடையே
மறுப்பவர் குறைப்பவர் வைபவர் தமக்கும் பகையினைக் கொள்ளாத தயையே
உனை எனக்கீந்ததால் உலகியல் வாழ்விலே  உச்சம் தனைத் தந்த ஈசன்
இனியொரு பிறவியை இருவர்க்கும் வைக்காமல்
இணையடிதனைச் சேர்க்கவே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home