தருவதாய் பெறுவதாய் வியாபாரமாகவே வாழ்க்கை என்றான உலகில்
கருவினில் தொடங்கி இதுவரை அன்பினை வேள்வியாய்ச் செய்யும் தவமே
வெறுப்பவர் இருப்பினும் கொண்டதோர் அருளினைக் குறையாமல் நல்கும் கொடையே
மறுப்பவர் குறைப்பவர் வைபவர் தமக்கும் பகையினைக் கொள்ளாத தயையே
உனை எனக்கீந்ததால் உலகியல் வாழ்விலே உச்சம் தனைத் தந்த ஈசன்
இனியொரு பிறவியை இருவர்க்கும் வைக்காமல்
இணையடிதனைச் சேர்க்கவே
கருவினில் தொடங்கி இதுவரை அன்பினை வேள்வியாய்ச் செய்யும் தவமே
வெறுப்பவர் இருப்பினும் கொண்டதோர் அருளினைக் குறையாமல் நல்கும் கொடையே
மறுப்பவர் குறைப்பவர் வைபவர் தமக்கும் பகையினைக் கொள்ளாத தயையே
உனை எனக்கீந்ததால் உலகியல் வாழ்விலே உச்சம் தனைத் தந்த ஈசன்
இனியொரு பிறவியை இருவர்க்கும் வைக்காமல்
இணையடிதனைச் சேர்க்கவே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home