பாலகுமாரம்
இலக்கியம் தனக்கோர் இலக்கணம் உண்டு
இலக்கில்லா மக்களை நல்வழிப்படுத்தலாம்
விலங்கு போல் மானிடர் வாழாமல் இருக்க
இலங்கு நன்னெறி புகல்வதே இலக்கியம்
செப்பிய பாதையில் சான்றோர் வழியில்
தப்பாமல் படைத்த வேதம் நின் நூல்கள்
விட்டுக் கொடுத்தலே காதல் என்பதை
தட்டிக் கொடுத்துச் சொன்னவன் நீயே
இல்வாழ்க்கை தன்னைத் தடம் மாறாமல்
நல் வாழ்க்கையாய் வாழ கீதை உரைத்தாய்
கற்றேன் பெற்றேன் வாழ்ந்தேன் நிறைவாய்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் மறவேன்
எழுத்தால் சித்தன் நீ; இதில் ஐயமில்லை
அழுத்திச் சொல்வேன் எங்கேயும் இதை நான்
கலங்கித் தவிக்கும் சம்சார வாழ்வில்
கலங்கரை விளக்கமே! நீ என்றும் வாழ்வாய்
இலக்கியம் தனக்கோர் இலக்கணம் உண்டு
இலக்கில்லா மக்களை நல்வழிப்படுத்தலாம்
விலங்கு போல் மானிடர் வாழாமல் இருக்க
இலங்கு நன்னெறி புகல்வதே இலக்கியம்
செப்பிய பாதையில் சான்றோர் வழியில்
தப்பாமல் படைத்த வேதம் நின் நூல்கள்
விட்டுக் கொடுத்தலே காதல் என்பதை
தட்டிக் கொடுத்துச் சொன்னவன் நீயே
இல்வாழ்க்கை தன்னைத் தடம் மாறாமல்
நல் வாழ்க்கையாய் வாழ கீதை உரைத்தாய்
கற்றேன் பெற்றேன் வாழ்ந்தேன் நிறைவாய்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் மறவேன்
எழுத்தால் சித்தன் நீ; இதில் ஐயமில்லை
அழுத்திச் சொல்வேன் எங்கேயும் இதை நான்
கலங்கித் தவிக்கும் சம்சார வாழ்வில்
கலங்கரை விளக்கமே! நீ என்றும் வாழ்வாய்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home