Tuesday, June 19, 2018

கல்வியின் மாண்பைக்  கற்றவர் சபை  விளக்கும் 
சொல்லிய கொடையின் பெருமையை  வறுமை  துலக்கும்
நல்லறத்தின் தகைமையை  முரணுறு கடமைகள் உரைக்கும்  
நல்ல ஞானத்தின் துலாக்கோல் தாம் கொண்ட புகழாம் 


முக நூலில் கவிஞர் மகுடேஸ்வரனின் ஒரு பதிவு  அற்புதம். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிலேயே  ஒரு சாரார் படித்துப்  புலம் பெயர்ந்து முன்னேறி வாழ்வதையும்  மற்றொரு  சாரார் வன்முறையிலேயே உழல்வதையும் இவர்கட்கு இடையே  உள்ள un bridgeable gap அதாவது  தொடர்பின்மை பற்றி மிக நுணுக்கமாக  விளக்கியிருக்கிறார். எப்போதும்  யாரையாவது வெல்ல வேண்டும்   என்ற உந்துதல் ஒரு மனப் பிறழ்வு  என்கிறார். 
அத்தகைய ஒரு உந்துதலே உறவுகளுக்குள் சண்டையாகிப் பின் பகையாகிக் கொலை வரை செல்கிறதென முடிக்கிறார்.  ஒரு சமூகப் பார்வையில் இது ஒரு Ph.D க்கு உண்டான தலைப்பு எனலாம். அறிவுக் கூர்மையும் சமூக அக்கறையும் இணைவது அரிது.  மஹா சக்தி அவர்க்கு எல்லா  நலமும் அளிக்கட்டும்.


முக நூலில் ஒருவர் பார்ப்பன எதிர்ப்பு அவசியம் என்று சொல்லியிருந்தார். நம்மூரில்தான் எல்லா அரசு அலுவலகங்களும் கல்லூரிகளும் அவர்களுக்குக் கதவை மூடிக் கொண்டு விட்டனவே.  இதில் பிராமண  டாமினேஷன்  எங்கிருக்கிறது? பார்ப்பன எதிர்ப்பாளர்களின் நோக்கம் என்ன ? பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும்  என்பதா? அல்லது அவர்கள் இன்னும் வசதியாகவே இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பா? ஒதுக்கப்பட்ட போதும் பிராமணர்கள் கல்வியை இறுகப் பிடித்துக் கொண்டார்கள்.  அறிவும்  திறமையும் அவர்களின் வளர்ச்சியின் அடித்தளம்.   இதைச் செய்யும் யாரும் வளரலாம். ஒடுக்கினாலும் ஒரு சமூகம் வளரக்கூடும் என்பது இதிலிருந்து புலனாகிறது. அமெரிக்காவில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்ட போது  இதைத்தான் ஆபிரகாம் லிங்கன் சொன்னார். தகுதியை வளர்த்துக் கொள்ளும்போது வாய்ப்புகளும் மரியாதையும் தானே வரும். அரசு கொடுக்கவில்லையெனில் தனியார் நிறுவனங்கள் தரும்.  இது நிதர்சனம்.   இன்று ஜாதி என்பது ஒரு குழு மனப்பான்மை தவிர வேறில்லை.  ஒரே பழக்க வழக்கங்களை உடையவர்கள் கூடிக் கொள்வது  இயல்பு.  திருமண உறவுகளுக்கான   ஒரு comfort level . இது இன்று எல்லோர்க்கும் பொருந்தும். கடவுள் மறுப்பும் பார்ப்பன எதிர்ப்பும் இன்று இங்கே ஓட்டு அரசியல்; அல்லது  ஒரு அறிவு ஜீவிப் போர்வை.  அவ்வளவுதான். 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home