Tuesday, June 19, 2018

மணியரசன் செந்தமிழனின் ஒரு பதிவு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இவர் மோடியை ஹிந்துத்வ வெறியர் என்கிறார். ஆனால் இவரே சிவ வாக்கியர் முதலான சித்தர்களைக் கொண்டாடுகிறார். சிவனைத் தமது இறை என்கிறார்.  அப்படியானால் சிவன் இந்துக்  கடவுள் இல்லையா?

நான் செந்தமிழனை மிகவும் மதிக்கிறேன். அவரது  விவசாயம் பற்றிய கருத்துக்களோடு உடன் படுகிறேன். இயற்கை வேளாண்மையே மீட்சிக்கு வழி என்பதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அவர் பதிவுகளில் ஒரு பார்ப்பன வெறுப்பைப் பார்க்கிறேன். ஏதோ  இன்றைய  எல்லாத்  தவறுகட்கும் பார்ப்பனர்களே காரணம் என்பது போல் பதிவது வெறுப்பை வளர்ப்பதாகும். .

இதே போல் நம்மூரில்  பல வாதங்கள் உள்ளன. பா  ஜ  க பிராமணர்களின் கட்சி என்று ஒரு வாதம். பிராம்மணர்களால்தான்   பாஜக ஆட்சிக்கு வந்தது என்று ஒரு வாதம். பிராம்மணர்கள் 3% என்பது   ஒரு புள்ளி விவரம். அப்படியானால் 3% ஆட்கள் வாக்களித்தா பாஜக ஆட்சிக்கு வந்தது? 

இட ஒதுக்கீடு வந்தது முதல் பிராம்மணர்கள் அயல் நாட்டு வாய்ப்புகளைத் தேடத்  தொடங்கிப் புலம் பெயரத்  தொடங்கினார்கள். இன்று இருப்பது பெரும்பாலும் வயதானவர்களும் அயல் நாட்டில் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களும் மட்டுமே.  இன்று அரசியலில் தீவிரமாக ஈடுபடும் ப்ராம்மணர்கள் எத்தனை பேர்? அவர்களாலா பா ஜ  க ஆட்சியில் அமர்ந்தது? 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home