Saturday, June 9, 2018

கலைமகளும் அலைமகளும் ஓருருக்கொண்டு எம்
தலைமகளாயினர் இது யாம் பெற்ற வரமே. நாடிச்
சென்ற நல்லகத்தில் நல்லன்பால் இதயம் கவர்ந்தாய்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தோம் தாயே எனைப் பெற்றவளே



அன்னையின் வயிற்றிலே கருவாக இருந்தெமக்கு உமையவள் அளித்த கொடையே

என்றைக்கும் உனதினிய புன்னகை நின் முகம் நீங்காது நின்றுறைகவே

என்றுமே பெற்றவர் சொல் பணிந்தெங்களைக் குளிர்விக்க வந்த வரமே

என்றுமே எங்குமே வெற்றியே பெற்று நீ நூறாண்டுகள் வாழ்கவே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home