வன்முறையில் ஈடு படுவது கன்னடர்களோ தமிழர்களோ அல்ல. அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அயோக்கிய அரசியல்வாதிகளின் கைக்கூலிகளே. அவர்களுக்கு மொழியும் தேசமும் ஒன்றுமில்லை. முகமற்ற அடையாளமற்ற விலங்குகள் அவர்கள். எனவே முக நூலில் வெறியேற்றும் பதிவுகளை இடாதீர்கள். பகைமை வளர்ப்பது நமக்கு நல்லதல்ல. சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் சகோதரனோ என் மகனோ அண்டை மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்லும் வாய்ப்பை நாம் இழக்கிறோம். வன்முறையில் ஈடுபடும் குண்டர்களுக்கும் அவர்களை ஏவி விடும் அரசியல்வாதிகளுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. கோபமான பதிவுகளை உடனே நிறுத்துங்கள்.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home