Tuesday, June 19, 2018

பாலுண்டு புற்றதிலே பள்ளி  கொண்ட மாயனவன்  
சால்புமிகு  முத்தழகன்  அமைத்ததோர்  ஆலயத்தில் 
சாலக் கேணி  நீரை நெய்யாக்கி விளக்கெரித்தான் 
நாலினும் எட்டவொண்ணாக்  கோவிலூர்க் கோமகனே   



ஆவினங்கள் பால் சொரியப் புற்றினுள்ளே தானுறைந்தான் 
கோவிலூராய்ப் பெயர் விளங்கும் முத்தழகன்   திருநாட்டில் 
சாலக்  கிணற்று  நீரை  நெய்யாக்கி விளக்கெரித்த   
மாலவனை   நாராயணா என்றுரைக்க ஒளிர்வாரே  


இரண்டிலாப் பொருளாம் இருடீகேசன் மாலவனை 
இரண்டாகிய தேவியர்தம்  கோவிலூர்க் கோமகனை 
இரண்டில்லா மனதோடு தமிழெடுத்துச் செய்த பாக்கள் 
இரண்டற்று ஊர் கலந்து மனமகிழ்ந்து ஏற்றிடுமே 



அழுக்கினைக் கொண்ட மனது அல்லாடிச் சுகங்கள் தேடி 
முழுமை என்ற ஒன்றைக் காணாமல்  கொண்ட உறவால் 
பழுதின்றிப் பெற்ற செல்வம் ; உறவினும் ஊரினும் அஞ்சி 
இழுக்கென்றே களைந்த தாயால்  இன்னுமோர் கர்ணன் இங்கே 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home