Tuesday, June 5, 2018

நாளை உந்தன் விடியல் உண்டு
அதற்கு எந்தன் பாடல் உண்டு 
வாழ்க்கை என்பதோர் வளைந்த பாதையில்
ஆழ்ந்து கிடக்குமோர் ஞானப் புதையல்
வெறுப்பு என்கிற ஆயுதம் கொண்டு
வெறி பிடித்தலையும் மூடர் உண்டு
எதிரே விரியும் திருப்பங்களிடையே
உண்மையைப் போன்ற பொய்கள் உண்டு 
மடமையில் மூடிய மாந்தர் கண்ணுக்கு 
மறை பொருள் ஞானம் மறைந்தே இருக்கும் 
மனிதரைப் பிரிக்கும் வேற்றுமை என்னும்
மகத்தான மதிலைக் கடந்து மேலேறின் 
ஞாலம் அளிக்கும் அழகிய காட்சி 
காலத்தை வென்ற  இறையின் மாட்சி
பேதம் களைந்த பார்வை இருந்தால்
வேதம் இதுவே பெரும்புகழ் உமதே
நாளை உந்தன் விடியல் உண்டு 
அதற்கு எந்தன் பாடல் உண்டு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home