புத்தாண்டில்
பாரினில் பாங்காய் அமைதி நிலவிட
காரிருள் வறுமை அகன்று ஒளி பெற
ஆவினம் பெருகி நீர் நிலை உயர
வேளாளர் சுமைகள் நீங்கி நலம் பெற
கேளாமல் மாதம் மும்மாரி பெய்திட
பாரதம் என்னுமோர் பொன் திரு நாட்டில்
பாங்கான தலைமை நின்று நிலைத்திட
பாவையைக் கிடத்தியே நாடகம் நடத்திய
பாதகர் இனியும் இல்லாதொழிந்திட
ஊடகம் என்றும் உண்மையே உரைத்திட
மூடர்கள் அரசியல் துறந்தே ஓடிட
அறம் வென்றிட மறம் தோற்றிட
திறம் கொண்ட தலைவர் தொடர்ந்து ஆண்டிட
நல்லாட்சி மலர்ந்து மக்கள் மகிழ்ந்திட
வில்லாண்ட வேத நாயகன் அருள்கவே
பாரினில் பாங்காய் அமைதி நிலவிட
காரிருள் வறுமை அகன்று ஒளி பெற
ஆவினம் பெருகி நீர் நிலை உயர
வேளாளர் சுமைகள் நீங்கி நலம் பெற
கேளாமல் மாதம் மும்மாரி பெய்திட
பாரதம் என்னுமோர் பொன் திரு நாட்டில்
பாங்கான தலைமை நின்று நிலைத்திட
பாவையைக் கிடத்தியே நாடகம் நடத்திய
பாதகர் இனியும் இல்லாதொழிந்திட
ஊடகம் என்றும் உண்மையே உரைத்திட
மூடர்கள் அரசியல் துறந்தே ஓடிட
அறம் வென்றிட மறம் தோற்றிட
திறம் கொண்ட தலைவர் தொடர்ந்து ஆண்டிட
நல்லாட்சி மலர்ந்து மக்கள் மகிழ்ந்திட
வில்லாண்ட வேத நாயகன் அருள்கவே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home