Monday, June 13, 2016

உள்ளம் உரைப்பதை உதடுகள் உரைக்குமாயின்
உள்ள படியே உமக்கு உற்றார் யாருமிலர்
பாங்காய் லாபம் பலமுறை  கணக்கிட்டு
ஆங்கே வாழ்வியலை வணிகவியலாக்கும்
அயிரை இட்டு வரால் வாங்கும் மனிதர்கள்
பயிரை மேய்ந்து வயிறு வளர்க்கும் வேலிகள்
இவர்களிடையே உண்மை விற்றால் கொள்வாரில்லை
தவறே ஆயினும் கூறுதற்கு  மௌனமே சிறந்த மொழி
கசக்கின்ற உண்மை இங்கு விலை போவதில்லை
பசப்புகிற மாந்தர்க்கே இங்கு அரசவை  அங்கீகாரம்
தேன்  போன்ற பொய் விரும்பும் மூடர் தம் நடுவே
ஏன் என்ற கேள்விகள் எடுபடுவதில்லை
உம் முன்னே கடந்து செல்லும் காட்சியைக் கண்ட படி
சும்மா இருப்பீர்; தண்ணீரில் தாமரையாய் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home